உத்தரப் பிரதேசம்

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தின் லாரியா டா கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போதுதான் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கோரக்பூர்: அதிகாலைப் பொழுதில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவன்மீது வெந்நீரை ஊற்றிய மனைவி, பின்னர் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்து, மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஜாவன்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.